28 Jan 2014

மட்- பனிச்சையடிக் கடலில் மூழ்கி காணாமல் போன 3 இளைஞர்களது உடல்கள் தேடும் பணி தொடர்கிறது-

SHARE
 (வரதன்)

மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் கடநககக கடந்த ஞாயிற்றுக்கிழமை கதமடத(26) மாலை  குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன  இளைஞர்கள் மூவரையும் தேடும்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்கள் 07  பேர் ஒன்றாக கடலில் குளித்துக்கொண்டிருந்தபோதுஇ 04 பேர் திரும்பி கரைசேர்ந்ததாகவும் இருப்பினும்இதங்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் கடல் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்டதாக தப்பி வந்தவர்கள் கூறியதாகவும் பொலிஸார் கூறினர். 

மட்டக்களப்பு பேச்சியம்மன் கோயில் வீதிஇ சின்ன ஊறணியைச் சேர்ந்த ரகுநாதன் டானியல் (வயது 23)இ பனிச்சையடியைச் சேர்ந்த ஜேரம் அனிஸ்டஸ் (வயது 20)இ  மட்டக்களப்பு புதிய எல்லை வீதி 2ஆம் குறுக்கைச் சேர்ந்த சேகர் பிரதீப் (வயது 19) ஆகியோரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

கடல் அலையின்வேகம் காரணமாக மூழ்கி காணாமல் போன 3 இளைஞர்களது  உடல்கள் தேடும் பணி தொடர்கிறது.






SHARE

Author: verified_user

0 Comments: