2 Feb 2024

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடலாமை.

SHARE

இறந்த நிலையில் கரை துங்கிய கடலாமை.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை(02.02.2024) காலை கடற்கரைக்கு சென்ற மீனவர்கள் உயிரிழந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர். குறித்த ஆமை சுமார் 30 கிலோ எடை இருக்கும் எனவும், அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆமை ஒன்று குருக்கள்மடம் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதனை நேரில் சென்று அவதானிக்கவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடமும் இவ்வாறு கிழக்கு கடற்கரைப் பரப்பில் இவ்வாறு பல கடலாமைகள் இறந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: