13 Jan 2024

பசுமையாக இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் வேலைத் திட்டம்.

SHARE

பசுமையாக இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் வேலைத் திட்டம்.

பசுமையான பூமியை தக்க வைத்துக் கொண்டு இயற்கையைப் பேணிப்பாதுகாக்க இளைஞர்கள் ஒன்றிணைந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்த வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

கால நிலைமாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சவால்களுக்கு ஈடு கொடுத்துத் தாக்குப் பிடிக்கும் வகையில் சமூக பொருளாதார உணவு உற்பத்தித் திட்டத்துடன் இணைந்ததாக மரம் நாட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களுடன் இணைந்து வாகரை மற்றும் வெருகல் பிரதேசங்களில் வாய்க்கால் மருங்குகளில் பயன்தரும் மரங்களை நாட்டடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பிராந்தியத்தில் மொத்தம் 20ஆயிரம் மரங்களை நாட்டும் திட்டத்தின் கீழ் காலநிலை மாற்ற சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தென்னை, தேக்கு, இலுப்பை, புங்கை உள்ளிட்ட நீண்ட காலப் பயன்தரும் பல் வகை மரங்களும் மா, பலா  உள்ளிட்ட கனி வர்க்க மரங்களும் நாட்டப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் அமுலாகிறது. சமூக, பொருளாதார, அபிவிருத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை விருத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த மரம் நாட்டும் வேலைத் திட்டம் இயற்கைச் சூழலைப் பேணுவதற்கும் மக்கள் போஷணைச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும்பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கும்உணவுப் பஞ்சத்தைக் குறைப்பதற்கும் நஞ்சுள்ள உணவுகளைத் தவிர்ப்பதற்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








SHARE

Author: verified_user

0 Comments: