23 Jul 2023

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, தமிழ் மொழித்தின வலயமட்டப் போட்டி.

SHARE

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, தமிழ் மொழித்தின வலயமட்டப் போட்டி.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, தமிழ் மொழித்தின வலயமட்டப் போட்டியின் இறுதி நிகழ் வெள்ளிக்கிழமை(21) குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கிழக்கு பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையின் தலைவர் பேராசிரியர் சி.சந்திரசேகரம், உதவிக்கல்விப் பணிப்பாளர் க. குணசேகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தமிழ்மொழித் தினப்போட்டியில் முதல் இடத்தினைப்பெற்ற ஐந்து நிகழ்ச்சிகள் ஆற்றுகை செய்யப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த வலயத்தின் கல்விப் பணிப்பாளராக இருந்து மாகாண கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று சென்ற அகிலா கனகசூரியம் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வாழ்த்துப்பா பாடி, மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனை வலயத்திற்குட்பட்ட தமிழ் பாட ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர், உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து இதனை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வலய தமிழ் மொழித்தினப் போட்டியில் மண்முனை மேற்கு கோட்டம் முதலிடத்தினையும், மண்முனை தென்மேற்கு கோட்டம் இரண்டாம் இடத்தினையும் ஏறாவூர் பற்று கோட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
















SHARE

Author: verified_user

0 Comments: