26 Dec 2022

சுனாமி தாக்கத்தின் 18 வது ஆண்டு நினைவு தினம் மட்டு.மாவட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு.

SHARE

சுனாமி தாக்கத்தின் 18 வது ஆண்டு நினைவு தினம் மட்டு.மாவட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு.

ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு 18வது ஆண்டு நினைவு தினம் திங்கட்கிழமை (26.12.2022)  உணர்வு பூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

சுமார் 1800 பேர் பலியான திருச்செந்தூர்,நாவலடி,டச்பார் போன்ற கரையோரப் பிரதேசங்களிலுள்ள சுனாமி நினைத் தூபிகளில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து கண்ணீர்மல்க கதறியழுது உறவினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் சமய நிகழ்வுகளும் இடம் பெற்றன.






































SHARE

Author: verified_user

0 Comments: