1 Nov 2022

களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சூரன்போர்.

SHARE


களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சூரன்போர்.

கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தி சூரன்போர் மிகவும் சிறப்பான முறையில் ஞாயிற்றுக்கிழமை(30) மாலை இடம்பெற்றது.

மூலமூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு பூஜைகள் இடம்பெற்றது, சுவாமி உள்வீதி வலம் வந்ததைம் தொடர்ந்து முருகப்பபெருமான் மயில் வாகனத்தில் வெளிவீதியில் வலம்வர சூரபத்மன் கழுகு, யானை, உள்ளிட்ட, வெவ்வேறு முகங்களை மாற்றிக் கொண்டு முருகப்பெருமானுடன் போர் புரிந்தார். இறுதியில் முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிபுரிந்து சூரபத்மனைக் கொன்றார். சூரன் சேவலும், மயிலுமாக மீண்டும் உயிர் பிழைத்தார். இறுதியில் முருகப் பெருமான் சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் எடுத்துக் கொண்டார். இந்த காட்சியை ஆலயத்தில் மிகவும் விமர்சையாக நடந்தேறியது.

ஆலய பரிபாலன சபைத் தலைவர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: