15 Oct 2022

அருந்ததி நிறுவனம் மட்டு.நகரில் நடத்தும் “மாற்று மோதிரம்” கண்காட்சி.

SHARE

அருந்ததி நிறுவனம் மட்டு.நகரில் நடத்தும்மாற்று மோதிரம்கண்காட்சி.

திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை நடத்தி வருகின்ற அருந்ததி நிறுவனம் சனிக்கிழமை(15) மட்டக்களப்பு அஞ்சனா கிராண்ட் பலஸ் ஹோட்டலில் 'மாற்று மோதிரம்' எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொன்றை கந்தசாமி கருணாகரன் தலைமையில் நடத்தவிருப்பதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா  தெரிவித்தார்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள இத்துறை சார்ந்தவர்களது வேண்டுகோளின் பேரில் இக்கண்காட்சியை பார்வையாளர்களுக்கு, இலவசமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பில் கேக் கண்காட்சியும் நடைபெறும். அத்துடன் திருமண சேவை, கொட்டுமேளக் காட்சி, மாற்றுமோதிரம் காட்சிகள் மேடையேற்றப்படும், இதன்போது கிழக்கு மாகாணத்திலுள்ள கேக், மணப்பெண், உள்ளிட்ட வடிவமைப்பாளர்களர் பங்கு கொண்ள்வதுடன், அவர்களின் இத்தொழில் ரீதியான ஆலோசனைகளும், அதுதொடர்பான வியாபார யுக்திகளும், வியாபாரத்திற்குரிய வர்த்தக இணைப்புக்களையும் மேற்ககொள்ளவுள்ளதாக இதன்போது மேகலா மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக மாநாட்டில் தினகரன், வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், புரவலர் காசிம் உமர், ஏற்பாட்டாளர் கந்தசாமி கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: