29 Aug 2022

வெல்லாவெளியில் இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி.

SHARE

வெல்லாவெளியில் இடம் பெற்ற  விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி.

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை - வெல்லாவெளி பிரதான வீதியில்  ஞாயிற்றுக் கிழமை(28) இரவு  இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பாலையடிவட்டையில் இருந்து சென்ற போது அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியோரத்திலுள்ள வயல் வெளியில் தடம்புரண்டதில் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான திருச்செல்வம் திவிகரன் என்பவரே பலியானவராவார்.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற  நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன்,  பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



 

SHARE

Author: verified_user

0 Comments: