25 Mar 2022

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் சித்தி.

SHARE

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் சித்தி.

அண்மையில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மட்.பட்.குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 7 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக வித்தியாலய அதிபர் திருமதி.வி.புஸ்பராஜா தெரிவித்தார். அந்த வகையில் பு.நிலாஜெனன் 168 புள்ளிகள், பி.பிரணாதித் 163 புள்ளிகள், ரா.கிரோஹித் 157 புள்ளிகள், சி.தக்சாயன் 156 புள்ளிகள், சு.அம்சகி 153 புள்ளிகள், கா.அலேஸ்ருதி 151 புள்ளிகள், பா.அக்ஷாசனா 151 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில் பாடசாலை அதிபர் திருமதி.வி.புஸ்பராஜா, மற்றும் மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களான மா.ராவீந்திரன் மற்றும் திருமதி ஜெ.ராஜீ ஆகியோருக்கு அப்பகுதி கல்விச் சமூகம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.         






SHARE

Author: verified_user

0 Comments: