நல்லாட்சியில் ஜனநாயகம் உயிர்பிக்கப்பட்டது – முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி.
வடகிழக்கிலுள்ள தமிழ் மகக்ளு;ககு ஒரு நிரந்தர அரசியல்தீர்வு கிடைக்கப்பெறவேண்டும் எனும் நோக்குடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் உருவாக்கி செயற்பட்டதுதான் எமது கடந்த கால நல்லாட்சியாகும். ஆக்காலத்தில் ஓய்வூதியக்காரர்களுக்குரிய பிரச்சனை, மேலும் பல அபிவிருத்தித்திட்டங்கள் என்பன ஏற்படுத்தப்பட்டன. துரதிஸ்ட்டவசமாக நாடாளுமன்றம் கலைந்ததனால் அவற்றை மேற்கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது. ஆனாலும் அப்போது 19 வது அரசியலமைப்பு அரசியல் சரத்து கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகம் உயிரப்பிக்கப்பட்டுள்ளது. என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் செவ்வாய்கிழமை(15) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான ஒன்றுகூடலின்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
எம்மால் உயிர்பிக்கப்பட்ட ஜனாநாயகத்தை தற்போதுள்ள அரசு மரணிக்கச் செய்துள்ளது. ஆணைக்குழுக்கள் அனைத்தும் சுதந்தரமற்ற நிலையில் காணப்படுகின்றன. எனவே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு கடந்த நல்லாட்சியில்தான் அடித்தளமிடப்பட்டது. தற்போது 20வது சரத்தைக் கொண்டுவந்து அவைகளனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளன. தற்போது அரசாங்கம் பசளையை நிறுத்தி விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது. இதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இலவசமாக பசளை வழங்குவோம் என தேர்தல் காலத்தில் கூறிய அரசு தற்போது பணம் கொடுத்துக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டில் எந்தப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்குச் சென்றாலும் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. வரிசை யுகம் ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்திற்கொண்டு நாட்டுமக்கள் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளார்கள்.
0 Comments:
Post a Comment