22 Feb 2022

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் அமைந்திருந்த கடை ஒன்று எரிந்து நாசம்.

SHARE

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் அமைந்திருந்த கடை ஒன்று எரிந்து நாசம்.

ட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள கடை ஒன்று திங்கட்கிழமை(21) மாலை திடீரென தீப்பிடித்ததில் கடையிலிருந்து பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது

திங்கட்கிழமை மாலை தனது வியாபார நடவடிக்கைகளை முடித்துவிட்டு கடையை வழக்கமாக பூட்டுவதுபோல் பூட்டிவிட்டு கடை உரிமையாளர் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை 5.45 அளவில் குறித்த கடையினுள் இருந்து புகை வெளிவருவதை அயலிலிருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இவ்விடையம் குறித்து உரிய கடை உரிமையாளருக்கும் அயலவர்கள் தெரிவித்ததற்கு இணைங்க அவர் விரைந்து சென்று தனது கடையைத் திறந்தபோது கடையினுள் இருந்த அனைத்துப் பொருட்களும் தீப்பற்றிக் கொண்டிருந்ததை அவதானித்தனர்.

எனினும் அங்கிருந்த அயலவர்களின் உதவியுடன் ஏனைய கடைகளுக்குத் தீ பரவாமல் ஒருவாறு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்துள்ளனர். இச்சம்பவத்தால் குறித்த கடையிலிருந்து பிளாஸ்ற்றிக், மற்றும் அலுமினியம் உள்ளிட்ட, பல பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இத்தீவிபத்துச் சம்பவம் மின்னனொழுக்காக இருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து விரைந்து சென்று களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். களுவாஞ்சிகுடி பொதுச் சந்தை தொகுதி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.        



















SHARE

Author: verified_user

0 Comments: