24 Jan 2022

இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கை

SHARE

இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கை.

இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கை இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வு இன்று(24) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் கே.பிரபாகரன் திருகோணமலை முகாமையாளர் எம்.நிரோசன் ஆகியோரி கலந்து கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய நிலவரம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

இதில் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பிரதி நிதிகள்இ வர்த்தக சங்க பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: