மட்டக்களப்பு மாவட்டத்தின் - மண்முனை மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் - மண்முனை
மேற்கு வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில் சிரமதானப் பணி ஒன்று வியாழக்கிழமை (02)காலை முன்னெடுக்கப்பட்டது..
பிரதேச செயலகம் ஊழியர்கள் மற்றும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு ஊடாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் போன்றோரால் இச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.மண்முனை மேற்கு பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாக பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தரின் கண்காணிப்பின்கீழ் இடம்பெற்ற இந்த சிரமதான பணியின்போது புற்கள், குப்பைகள், கற்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டு டெங்கு நுளம்பு பரவாமல் சுகாதாரமான சிறந்த சூழலை பேணும் வகையில் இச் சிரபுதானம் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment