அக்னிச் சிறகுகள் பேரவையால் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
21/12/2021 அன்று பிறந்த நாளை கொண்டாடிய அக்னிச் சிறகுகள் பேரவை உறுப்பினர் த.திலக்சன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் வவுணதீவு செயலகத்திற்குட்பட்ட ஈச்சந்தீவு கிராமத்தில் மிகவும் வறுமைநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் கற்பகம் அம்மா மற்றும் அவரது மகள் லெட்சுமி ஆகியோருக்கு எம்மால் முடிந்த உதவியாக அக்னிச் சிறகுகள் பேரவையால் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதியினை வழங்கி வைத்த திலக்சன் அவர்களுக்கு அக்னிச் சிறகுகள் பேரவை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு,இதை வழங்கி வைத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். "மக்களின் வாழ்வு மேம்பட ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்"
அக்னிச் சிறகுகள் பேரவை,நாவற்காடு,மட்டக்களப்பு,
0 Comments:
Post a Comment