மட்டு.மாவட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேலை நிறுத்தம்--கொரோனா -டெங்கு பணிகள் ஸ்தம்பிதம்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார உத்தியோகத்தர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள வேலை நிறுத்தத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்துள்ளனர்.
இதனால் இம்மாவட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அலுவலகங்கள் யாவும் முற்றாக
மூடப்பட்டிருந்தன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும்
சுமார் 72 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமை புரிகின்றனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கொரோனா தடுப்பு தடுப்பூசி
ஏற்றும் நடவடிக்கைகள் உட்பட கொரோனா விழிப்பட்டல் மற்றும் டெங்கு ஒழிப்பு நடடிவடிக்கைகளும்
மாவட்டத்தில் ஸ்தம்பதடைந்துள்ளன.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இம்மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பீசீஆர் நடவடிக்கைகளும்
பாதிக்கப்பட்டுள்ளன. இதே வேளை மாவட்டத்தில் ஏனைய சுகாதார ஊழியர்களும் பணி பகிஸ்கரிப்பில்
ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment