2 Sept 2021

நள்ளிரவில் கிரமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் மக்கள் அல்லோலகல்லோலம் - பயிர்கள் தாக்கி அழிப்பு.

SHARE

நள்ளிரவில் கிரமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் மக்கள் அல்லோலகல்லோலம் - பயிர்கள் தாக்கி அழிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் எல்லைப்புறக் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் புதகிழமை(01) அதிகாலை 2 மணியளவில் புகுந்த  2 காட்டு யானைகளால் மக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்படதாகவும், யானைகள் கிராமத்தில் மக்கள் செய்கை பண்ணப்பட்டிருந்த மரவெள்ளி, தென்னை, மா, பலா போன்ற பயிர்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அக்கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய்கிழமை(31) இரவு 8 மணியளவில் அக்கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அங்கிருந்து பயிர்களை துவம்சம் செய்து வேளை மக்கள் ஒன்றுகூடி தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு கொழுத்தியும், உரத்த குரலில் சத்தமிட்டும், விரட்டியுள்ளனர். பின்னர் இரவு 11 மணியளவில்தான் கிராமத்தை விட்டு துரத்தியுள்ளனர்.

பின்னர் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் மீண்டும் அக்கிராமத்திற்குள் புகுந்த அதே காட்டுயானைகள் அங்கு மக்கள் அவர்களது வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மரவெள்ளி தென்னை, மா, மற்றும் பலா போன்ற பயிர்களை முற்றாக அழித்து துவம்சம் செய்துவிட்டு அதிகாலை 5 மணியளவிலதான்; கிராமத்தை விட்டு நகர்ந்ததாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமது கிராமத்தில் தொடர்ந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும், அழிவுகளும், இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் தாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும், அதுபற்றி இன்னும் தமக்குரிய தீர்க்கமான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்கு யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத் தரவேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் மிக நீண்டகாலமாகவிருந்து காட்டுயானைகளின் அட்காசங்களும், தொல்லைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   














                      

SHARE

Author: verified_user

0 Comments: