கூட்டெரு தயாரிப்பதற்குரிய இயந்திர விளக்கமும் பயிற்சியும் விவசாயிகளுக்கு வழங்கி வைப்பு.
கிழக்கு மாகாண ஆளுநரின் நிதி ஒதுக்கீட்டில் விவசாய அமைச்சின் செயலாளரின் பணிப்பின்பேரில், கூட்டெரு தயாரிப்பதற்காக மூலப் பொருட்களை இலகுவாக வெட்டுவதற்காக கமநல கேந்திர நிலையங்களுக்கு வழங்கப்பட்ட இயந்திரம் இயக்கும் செயற்பாடும் அது தொடர்பான விளக்கப் பயிற்சியும் சனிக்கிழமை(25) பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவிலுள்ள களுமுந்தன்வெளி எனும் கிராமத்திர் இடம்பெற்றது.
இதன்போது மூலப் பொருட்களை சிறு துண்டுகளாக வெட்டும் மேற்படி இயந்திரம் இயக்கப்பட்டு அது தொடர்பில் விவசாய விவசாயிகளுக்கு அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.
பழுகாமம் பிரிவின் விவசாய போதனாசிரியர் ப.சகாப்தனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ரி.மேகராசா, விவசாய போதனாசிரியர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர் விவசாயிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment