21 Sept 2021

கட்டுரை : தேசிய நெருக்கடிக்கு மத்தியில் இடையறாத சேவையூம் நிலுவை செலுத்துதலும்

SHARE

கட்டுரை தேசிய நெருக்கடிக்கு மத்தியில் இடையறாத சேவையூம் நிலுவை செலுத்துதலும்.ஆரோக்கியமான மனித வாழ்வின் ஜீவநாடியாக சுத்தமான நீர் உள்ளதென்றால் அது மிகையாகாது. தனது 270 நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து 343க்கு மேற்பட்ட நீர் வழங்கல் திட்டங்களின் ஊடாக 24 இலட்சத்திற்கு மேற்பட்ட நீர் இணைப்புகளுக்கு பாதுகாப்பான குடிநீhpனை தொடர் கண்கானிப்பின் ஊடாக சர்வதேச, தேசிய தர நிர்ணயங்களுக்கேட்ப கொவிட் இடர்நிலை சவாலுக்கு மத்தியிலும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது மேற்கொண்டு வருகின்றது.

ஒரு குடும்பத்திற்கான நீரிணைப்பை வழங்க ரூ. 350,000 தெடக்கம் 6 இலட்சத்திற்கு மேற்பட்ட பணத் தொகை செலவிடப்படுகிது. மேலும் சபை மூலம் வழங்கப்படுகின்ற ஒரு அலகு நீரை (1000 லீற்றர்) சுத்திகரித்து விநியோகிப்பதற்காக சபைக்கு ரூ. 50 மேற்பட்ட தொகை செலவளிக்கப்படுகிறது. ஆனால் பாவனையாளர்களிடமிருந்து ஒரு அலகுக்கான கட்டணமாக முறையே சாதாரண பாவனையாளராயின் ரூ. 12.00ம் சமுர்த்தி பயனாளியாயின் ரூ. 05.00 ம் (பொருத்தமான வரிகளுடன்) அறவிடப்படுகின்றது. இதனை செலவிடப்படும் தொகையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வீடுகளுக்கான நீர் ஒரு சலுகை கட்டணத்திலேயே வழங்கப்படுகிறது எனலாம்.

  தேசிய நீர் வழங்கல் சபை சுத்தமான நீரை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வருடாந்தம் ரூ. 20,000 மில்லியனுக்கு மேற்பட்ட பெரும் தொகை பணத்தினை  செலவு செய்தே (இயக்குதல் மற்றும் பராமரிப்பு, மின்சாரம், எரிபொருள், இரசாயணம், உதிரிபாகங்கள் கொள்வனவு…) வழங்கிவருகிறது.

அத்தியவசிய சேவை என்ற அடிப்படையில் கொவிட் இடர்நிலைக்கு மத்தியிலும் அவ்வப்போது ஏற்படும் அவசர திருத்த பணிகளையூம் இரவு பகல் பாராது மேற்கொண்டு தேசத்திற்கான தனது மகத்தான பொறுப்பினை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை உரிய முறையில் நிறைவேற்றிவருகிறது.

நீர் பாவனையாளர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தமது நீர் கட்டணத்தை உரிய வேளையில் செலுத்திவரும் நிலையில் பெரும்பாலானோர் காலம் தாழ்த்தியே செலுத்துகின்ற நிலையும் காணப்படுகின்றது. தற்போதைய நிலையில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு நீர் பாவனையாளர்களால் செலுத்தப்பட வேண்டிய ரூ. 750 கோடி உள்ளது. அதே நேரம் செலுத்த வேண்டிய ரூ. 5000.00 க்கு மேற்பட்ட தொகையினை ஒரு வருடகாலமாக ஒரு சதத்தையேனும் செலுத்தாத 39,000 பாவனையாளர்கள் உள்ளனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இவ்வாறான நிலையில் தொடர்ந்து நீர் வழங்களை மேற்கொள்வது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது என சபையின் பொது முகாமையாளரினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சுத்தமான நீர் எமது ஆரோக்கியத்தில் ஆழமாக செல்வாக்கு செலுத்துவதனால் சபையின் தொடர்ச்சியான பணி என்பது எமது தேசத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

தற்போது (இக்கட்டுரை எழுதப்படும் போது) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதனால் வங்கிகள் மற்றும் தபாலகங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளதனால் பாவனையாளர்கள் பாதுகாப்பான முறையில் தமது வீடுகளில் இருந்தவாரே நீர் கட்டணங்களை சபையின் www.waterboard.lk என்னும் இணையத்தளம் அல்லது கையடக்கத் தொலைபேசி விண்ணப்பத்தின் (Mobile Apps) மூலமும் (NWSDB SelfCare App/ SMART pay app) எதுவித மேலதிக கட்டணம், நேர விரையம், இதர சிரமம் இன்றி பாதுகாப்பான முறையில் செலுத்திக்கொள்வதற்கான வசதிகளை சபை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை 0112623623 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாகவும் அறிந்துகொள்ள முடியும். 

மேலும் நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள Mobile Apps மற்றும் இணைய வங்கி சேவைகளையும் பயன்படுத்தி பாவனையாளர்கள் தமது நீர் கட்டணங்களை செலுத்திக்கொள்ள முடியும் (மக்கள் வங்கி, இலங்கை வங்கி...).

அத்துடன் சபையின் பிரதான காரியாலயங்களிலுள்ள காசாளர் கருமபீடங்களிலும் வாரநாட்களில் செலுத்தலாம். இன்னும் தற்போது நாடு பூராகவும் பாவனையாளர்களின் நலன்கருதி தற்காலிகமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள நடமாடும் காசாளர் வாகனங்களிலும் மற்றும் நீர் வழங்கல் திட்ட காரியாலயங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தற்காலிக காசாளர் கருமபீடங்களிலும் செலுத்திக்கொள்ளலாம். இதன் போது கொவிட் சுகாதார வழிமுறைகளைப் பேணி செலுத்திக் கொள்வதற்கான ஒழுங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பாவனையாளர்கள் தமது நீர் கட்டத்ததை செலுத்துமாறு குறுந்தகவல்கள் (SMS), தொலைபேசி, ஒலி பெருக்கி, மின்னஞ்சல், பாவனையாளர்களின் வசிப்பிடங்களுக்கு நேரடியாகச் விஜயம் செய்தல் மூலமாகவும் நினைவூடல்கள் வழங்கப்படுகின்றன. அதன் போது உரிய அறிவுறுத்தல்களுக்கேற்ப பாவனையாளர்கள் தமது நீர் கட்டணங்களை செலுத்திகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளை முறையாக பேணுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.      

தினமும் தொலைபேசி பாவனைக்காக நூறு அல்லது பல நூறு ரூபாக்கள் மீள்நிரப்பப்படுகின்றன. ஆனால் நாம் பயன்படுத்திய எமது ஆரோக்கியத்தக்கு துணைநிற்கின்ற மற்றும் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும் நீருக்கான கட்டணத்தை செலுத்துவதில் அசட்டையாக இருப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது என்பதனை குறித்த பாவனையாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும். 

பாவனையாளர்  கள் தமக்கான நீர் பட்டியல் நிலுவைகள் பட்டியல் கிடைக்கப்பெற்றவுடன் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் 1.5 சதவீத கழிவினை பெற்றுக்கொள்ள முடிவதோடு தாமதமாகும் நிலுவைகளுக்கு 2.5 சதவீதம் மேலதிகமாக அறவிடப்படும் என்பதனையும் இங்கு கருத்திற்கொள்ள வேண்டும்.

மேலும் உங்களது நீர் பட்டியல் குறித்த முறைப்பாடுகள், தளிவின்மை காணப்படுமிடத்து அவற்றிக்கான தீர்வுகளை நீர் பட்டியலின் பின்பக்கத்தில் உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு அவற்றிக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

பாவனையாளர்களின் நலன் கருதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது இன்னும் சில பின்வரும் வசதிகளையும் வழங்கியுள்ளது.

1.         உங்களது நீர்ப்பட்டியல் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 0719399999 எனும் இலக்கத்திற்கு உங்கள் நீர்ப் பட்டியல் கணக்கிலக்கத்தினை (நீர்ப்பட்டியலின் இடது பக்க மேல் மூலையில் உள்ளது) xx / xxx / xxx/ xxx/  மாதிhpயின் பிரகாரம் குறுந்தகவல் (SMS) அனுப்புதல்

2.         உங்களது நீர் பட்டியலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்வதற்கு மேற்படி 0719399999 இலக்கத்திற்கு நீர் பட்டியல் கணக்கிலக்கத்துடன் ((xx/xx/xxx/xxx/xx மாதிரியின் பிரகாரம்) உங்கள் மின்னஞ்சல் முகவரியை (xx/xx/xxx/xxx/xx example@gmail.com எனும் மாதிரியின் பிரகாரம் குறுந்தகவல் அனுப்புதல்

மேலே உள்ள இலவச சேவைகளை நீங்கள் செயற்படுத்தி அவைகளின் பயன்களை பெற்றுக்கொள்ளுமாறும் உங்களை நினைவூட்டுகின்றறோம்.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக நாளாந்தம் பல தடவைகள் கைகளை கழுவுவதற்கும் உடலை சுத்தம் செய்வதற்கும் ஆடைகளை துவைப்பதற்கும் இன்னும் ஆவி பிடிப்பதற்கும் சுத்தமான நீரின் தேவையானது இன்றியமையாததாகும். அதாவது மனித ஆரோக்கியத்தின் மறுவடிவமான சுத்தமான நீரை மக்களுக்கு வழங்கி மகத்தான பணியினை மேற்கொண்டுவரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிதி நிலையினை கருத்திற்கொண்டு  பாவனையாளர்கள் தனது கடமையினை உணர்ந்து தாம் பாவித்த நீருக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அவர்களின் தலையாய பொறுப்பாகும். ஆதலால் இன்னும் தாமதிக்காது செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு இதன் மூலம் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் எதுவித இடையுறுகளும் இன்றி தொடர்ச்சியாக சுத்தமான நீரினை பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

 

 எம்.எஸ்.எம். சறூக்

சிரேஷ்ட சமூகவியலாளார், பிராந்திய முகாமையாளர் காரியாலயம்,

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை - அக்கரைப்பற்று

SHARE

Author: verified_user

0 Comments: