26 Sept 2021

பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்பு.

SHARE

பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகாமையில்   இருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (26) களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு வாவியின் பாட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதில் மீன் பிடித்துக் கொண்டிந்த மீனவர்களின் வலையில் குண்டு ஒன்று சிக்கியுள்ளது. இவ்விடையம் குறித்து மீனவர்கள் உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். உடன் இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன மற்றும் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட குழுவினர் குண்டைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னர் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் இக்குண்டு செயலிழக்கச் செய்வதற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 












SHARE

Author: verified_user

0 Comments: