9 Aug 2021

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் காத்தான்குடியில் மூவர் கைது.

SHARE

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் காத்தான்குடியில் மூவர் கைது.

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை(09)  காலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.         

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு  பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறியின் வழிகாட்டலில் காத்தான்குடி டெலிகொம் வீதியில் 5கிராம் மற்றும் 900 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஓருவரும் கர்பலா பிரதேசத்தில் 180 மற்றும் 160 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: