22 May 2021

மட்டு.மாவட்டத்தில் சோதனைகள் தீவிரம் - முழுமையாக கடைப்பிடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு.

SHARE

மட்டு.மாவட்டத்தில் சோதனைகள்  தீவிரம் - முழுமையாக கடைப்பிடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு.

மட்டு.மாவட்டத்தில் சோதனைகள்  தீவிரம் - மட்டு.மாவட்ட மக்களால் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு அன்றாட அலுவல்கள் முழுமையாக ஸ்தம்பிதம்


அரசாங்கத்தினால் நேற்றிரவு 11மணிமுதல் அமுல்  படுத்தப்படும் பயணக் கட்டுப்பாட்டு நடைமுறை மட்டக்களப்பு மாவட்ட மக்களால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. முக்கிய நகரங்களிவ் படையினரும் பொலிசாரும் கடுமையான சோதனை நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் யாவும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.போக்குவரத்துச் சேவைகளும் இடம் பெறவில்லை..

பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரதான நகரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயல் இழந்துள்ளதுடன் வீதிகளும் வெறி ச்சோடிக் காணப்படுகின்றன.









SHARE

Author: verified_user

0 Comments: