15 May 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் செயல் - சிறிநேசன்

SHARE

முள்ளிவாய்க்கால்  நினைவுத் தூபி  உடைக்கப்பட்டது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் செயல் -  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்  தெரிவிப்பு.

முள்ளிவாய்க்கால்  நினைவுத் தூபி  திட்டமிட்டு உடைக்கப்பட்டது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் செயற்பாடாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஊடகங்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை (14)  தெரிவித்துள்ளார். 

சொந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி, இரவு வேளையில்  திட்டமிட்டு உடைக்கப்பட்டதை  சம்பவத்தை கண்டிக்கின்றேம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 



SHARE

Author: verified_user

0 Comments: