மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு மற்றுமொருவர்படுகாயம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுக்குடியிருப்பில் செவ்வாய்கிழமை(18) மாலை இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளர்.
மட்டக்களப்பில் இருந்து கல்முனைப் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த காரும், கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பொதுமக்கள், பொலிசாரின் உதவியுடன் படுகாயமடைந்தவரையும், சடலத்திதையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தில் புதுக்குடியிருப்பைச் சேர் ராஜேஸ்வரன் ரஞ்சித்(55-வயது) என்பவர் உயிரிழந்ததுடன் அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment