மட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் புதன்கிழமை முதல் முதல் தனிமைப்படுத்தல் அமுல்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை
புதன்கிழமை (19) முதல் முழுமையாக முடக்குவதற்கான தீர்மானத்தை தேசிய கொவிட்
19 தடுப்புச் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளதாக, மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன்
தெரிவித்தார்.
இதன்படி பாலமீன்மடு, பூநொச்சிமுனை, கல்லடி வேலூர், சின்ன ஊறணி மற்றும் திருச்செந்தூர்
ஆகிய 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படடுள்ளன.
அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்ப்பட்டதையடுத்தே இப்பகுதிகள் தினமைப்படுத்தப்பட்டுள்ளதாக
மாவட்ட பிராநதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment