மதுரங்கேணிக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு கனகம்மா பவுண்டேசன் மதிய நேர உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குபட்ட அதிகஸ்ரப்பிரதேச பாடசாலையாக காணப்படும் மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் கற்றலை மேலும் மேம்படுத்துவதற்காக அங்கு கல்வி பயிலும் 70 மாணவர்களுக்குரிய மதிய நேரை உணவை வழங்குவதற்கு பொறியலாளர் கே.குமரேசன்; அவர்களின் தலைமையில் லண்டனிலிருந்து செயற்பட்டு வரும் கனகம்மா பவுண்டேசன் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை நடைமுறைப்படுத்துகின்றது.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிகும் நோக்கில் பாடசாலை நண்பகல் கலைந்ததும் மாணவர்கள் வீடு செல்லாமல் பாடசாலையிலே இருந்து மாலை வேளைவரைக் கற்பதற்காக மதிய உணவு வழங்கப்படுகின்றது. செய்யப்பட்டுள்ளது.
இம்மாணவர்களுக்கு உணவு வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் கே.மங்களரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் த.வசந்தசராசா, செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் வ.சக்திவேல், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment