சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு ஆற்றல் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மகளீர் தின நிகழ்வு.
சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு ஆற்றல் பேரவையின் ஏற்பாட்டில் மகளீர் தின நிகழ்வு சனிக்கிழமை (13) மாலை மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி சிறுவர் விளையாட்டு பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள மகளீர்களை இணைத்து இந்த நிகழ்வு இதன்போது நடைபெற்றது.
இதன்போது சாதனை பெண்களாக தெரிவு செய்யப்பட்ட ஆரையம்பதியை சேர்ந்த அசோகராசா கௌரி, கிரான்குளத்தை சேர்ந்த கந்தசாமி கண்ணகை, புதுக்குடியிருப்பை சேர்ந்த பாக்கியராசா அழகம்மா, மற்றும் மாவிலங்கத்துறையைச் சேர்ந்த மங்கலம் ஆகியோர், கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட மன்முனைபற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரின் இணைப்புச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி. மங்களேஸ்வரி சங்கர், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாத்தா குலேந்திரகுமார் ஆகியோர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மேலும், ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் தயானந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான தினேஷ், கந்தசாமி மற்றும் சுந்தராம்பாள் கிராம உத்தியோகத்தர்களான ர.புவலெட்சுமி, வி.மனோஜா, க.அபிஷேகா, நி.மிருஜினி, கி.தயனி மற்றும் அ.சுகன்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment