12 Mar 2021

முதலைகளின் நடமாட்டம்

SHARE

கடந்த மழை வெள்ளத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது சிறிய குளங்களில் தற்போது நீர் நிரம்பியுள்ள நிலையில், தற்போது அக்குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதனால் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை முதலைகளின் பிடிக்குட்பவடுதாகவும்  கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி, பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பொறுகாமம், பழுகாமம், உள்ளிட் பல இடங்களில் அமைந்துள்ள குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இதில் மீன் பிடிப்பவர்கள், மற்றும் கால்நகடைகளின் குடி நீர் தேவைகளைப் பூர்தி செய்பவர்களும், மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அப்பகுதி சமூக நலன் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: