29 Mar 2021

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் மாபெரும் கிரிக்கட் தொடர் - கோவில் போரதீவு உதயதாரகை வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்தது.

SHARE

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் மாபெரும் கிரிக்கட் தொடர் - கோவில் போரதீவு உதயதாரகை வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்தது.

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இவ் வருடத்துக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (28) கழகத் தலைவர் யோ.சதேஷா தலைமையில் களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பிரதேசத்தின் பல கிரிக்கட் அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டியில் குருமன்வெளி ரொபின் விளையாட்டுக் கழகத்தினை வெற்றி கொண்டு கோவில் போரதீவு உதயதாரகை அணி இறுதிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

இதன்போது  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.











 

SHARE

Author: verified_user

0 Comments: