மட்டு.மாவட்ட வைபவம் 850 கிலோ அரிசி அன்னதானத்திற்காக வழங்கப்பட்டது.
அனுராதபுரத்தில் ஜனாதிபதி தலைமையில எதிர்வரும் 3ம் 4ம் திகதிகளில் நடைபெறும் தேசிய புத்தரிசி விழாவிற்கு இணையாக நாடளாவிய ரீதியில் பல்வேறு புத்தரிசி வைபவஙகள் இடமபெற்று வருகினறன.
மட்டக்களபபு மாவட்ட பிரதான வைபவம் கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (25)நடைபெற்றது.
மாவட்டத்திலுள்ள 17 கமநல கேந்திர நிலைய பிரதேசங்களிலிருந்தும் பெறப்பட்ட புத்தரிசிகள் ஒன்று சேர்க்கப்பட்டு அனுராதபுரத்திற்க கொண்டு செல்லப்பட்டன. 855 கிலோ அரிசி அன்னதானத்திற்காக வழங்கப்பட்டன. 25 மாவட்டங்களிலுமருந்து சேகரிக்கப்பட்ட அரிசியிலிருந்து குறித்த தினத்தில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்கள பெரும்பாக அதிகாரி எம்.ஐ.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற புத்தரிசி விழாவி;ல் 17 கமநல கேந்திர நிலைய பிரதேசங்களிலிருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment