மனித பாவரனக்குதவாத 600 கிலோ தேயிலை மட்டககளப்பில் விசேட பொலிஸ் குழுவால் மீட்பு - ஒருவர் கைது.
மனித பாவனைக்குதவாத 600 கிலோ கிராம் தேயிலையை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் கைப்பற்றியுள்ளதாக பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.டி.பண்டார தெரிவித்தார்.
சனிக்கிழமை(13) மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் அனுமதிமதிப் பத்திரமின்றியும் மனித பாவனைக்குதவாது பழுதடைந்ததுமான 50 கிலோ அடங்கிய 12 மூடை தேயிலையை பதுக்கிவைத்திருந்த நிலையில் பொலிசாரினால் கண்டு பிடிக்கப்பட்டதுடன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டார்.
குறித்த தேயிலை மனித பாவனைக்குதவாத நிலையில காணப்படுவதாகவும் தேயிலையின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரும் கைப்பற்றப்பட்ட 600 கிலோ தேயிலையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
பொலிசார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment