19 Feb 2021

மண்முனை தென் எருவில் பற்றில் சமுர்த்தி சௌபாக்கியா வீடுகள் மக்களிடம் கையளிப்பு.

SHARE

மண்முனை தென் எருவில் பற்றில் சமுர்த்தி சௌபாக்கியா வீடுகள் மக்களிடம் கையளிப்பு.

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட சௌபாக்கியா வீடுகள் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களால் வியாழக்கிழமை(18) உத்தியோகபூர்வமாக குறிப்பிட்ட பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

குறித்த வீட்டுத்திட்டத்தின்கீழ் களுதாவளை, குருமண்வெளி, மகிழூர், கோட்டைக்கல்லாறு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 05 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ரூபா 200,000 ரூபாவும், மக்கள் பங்களிப்பு மற்றும் தனவந்தர்களால் மிகுதி தொகையும் சேர்த்து ருபா 500,000 ரூபா பெறுமதியான வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பி.துரைராசசிங்கம், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.சோ.தமிழ்வாணி, சமூகம் அபிவிருத்தி உதவியாளர் தெ.உதயசுதன், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.உதயகுமார், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: