22 Jan 2021

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளுக்கான வவுச்சர்கள் வழங்கி வைப்பு.

SHARE

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளுக்கான வவுச்சர்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட  45 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்வி அமைச்சினூடாக  உலர் உணவுப் பொதிகளுக்கான வவுச்சர்கள் வழங்கும் ஆரம்ப  நிகழ்வு வியாழக்கிழமை (21)  இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு, மண்முனை  தென் மேற்கு, ஏறாவூர்பற்று மேற்கு ஆகிய மூன்று கோட்டங்களையும் சேர்ந்த 45 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்வி அமைச்சினூடாக ஓர் தனியார் நிறுவனத்தின் அனுசரணையில் உலர் உணவுப் பொதிகளுக்கான வவுச்சர்கள் வழங்கும் ஆரம்ப  நிகழ்வு  வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவீட் 19 அசாதாரண சூழ்நிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட வருமானங்களை இழந்த முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு இவ்உதவி  வழங்கப்பட்டுள்ளது.

 சுகாதார  நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் வலயத்தின் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு உதவிக்கல்விப்பணிப்பாளர் சு.கணேஸ் போன்றோர் கலந்துகொண்டு இவர்களுக்கான தலா இரண்டாயிரம் பெறுமதியான வவுச்சர்களை வழங்கி வைத்தனர்

கிழக்கு மாகாணத்தில்  17 வலயங்களிலும் 731 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாகாண பணிப்பாளரின் வேண்டுகோளின்பேரில் இவ் உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE

Author: verified_user

0 Comments: