29 Jan 2021

விவசாயச்செய்கை மூலம் 3000 கோடி வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதற்கு நான் செயற்படுவேன் - சந்திரகாந்தன் எம்.பி

SHARE

விவசாயச்செய்கை மூலம் 3000 கோடி வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதற்கு நான் செயற்படுவேன் - சந்திரகாந்தன் எம்.பி

மட்டக்களப்பில் விவசாயம் சம்பந்தமான அறிவு பூர்வமான ஒரு சமூகத்தினை  கட்டியெழுப்பியும், நவீன விவசாய பயிற்சிகளை வழங்கியும் மாவட்டத்தில்  விவசாயச்செய்கை மூலம் 3000 கோடி பெறுமதியான வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதற்கு நான் செயற்படுவேன்.மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவிப்பு.

மட்டக்களப்பில் விவசாயம் சம்பந்தமான அறிவு பூர்வமான ஒரு சமூகத்தினை  கட்டியெழுப்பி விவசாயிகளுக்கு நவீன விவசாய பயிற்சிகளை வழங்கி  விவசாயச்செய்கையை ஊக்குவிப்பதன்மூலம் 3000 கோடி பெறுமதியான வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதற்கு நான் செயற்படுவேன் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கரடியனாறு விவசாய சேவைக்கால  பயிற்சி நிறுவகத்தின்மூலம்  மட்டக்களப்பின் விவசாயத்துறையை முன்னோக்கிக் கொண்டு செல்லல் தொடர்பான விசேட கூட்டம் கரடியனாறு  விவசாய பண்ணை தொகுதியில்  அமைந்துள்ள சேவைக்கால பயிற்சி நிருவாக அலுவலகத்தில் புதன்கிழமை(27) பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட கூட்டத்திலே தலமைதாங்கி பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி திருமதி.மங்களேஸ்வரி சங்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.சிவநேசன், மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.நாகரெட்ணம், உட்பட பலர் கலந்துகொண்டு பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்....

இந்நிலையத்தின் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி புதியரக விதைகளையும், விரைவாக பலன் தரக்கூடிய நாற்றுகளையும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நான் அயராது நடவடிக்கை எடுப்பேன். மட்டக்களப்பு  மாவட்டத்திற்கு தேவையான விதைகளை இவ்விவசாயப ;பண்ணையில் வினைத்திறனுடன் உருவாக்கி,

மாவட்டத்தில் உள்ள இரண்டு இலட்சம் ஏக்கர் வயல் காணிகளிலும் எவ்வாறு விளைதிறனை அதிகரிக்க உத்திகளை கையாண்டு மாவட்டத்தின் விளைச்சலை அதிகரித்து அதற்கான சந்தை வாய்ப்புக்களை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க நான் முன்னின்று உழைப்பேன். இவ்வாறு உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் குறைந்தது வருடமொன்றிற்கு 3000கோடி ரூபா வரையிலான பணத்தினை வேளாண்மை செய்கை மூலமாக எமது மாவட்டத்திற்குள் அதிகரிக்க செய்ய நான் செயற்படுவேன்.

மண் பரிசோதனைகள் மூலம் பொருத்தமான பயிர் நிலங்களை மாவட்டத்தில் கண்டுபிடித்து அங்கு பொருத்தமான முதலீட்டாளர்களை இனம் கண்டு பாரிய அளவான நிலப்பரப்பில் விவசாயத்தினை மேற்கொள்ளப்படும்.வளம் குறைந்த மண்ணினை கொண்ட  விவசாய காணிகளை எவ்வாறு வளமான காணிகளாக மாற்றுவதற்கான ஆய்வுகளை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் என்ற வகையில் நான் முன்னெடுப்பேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற விவசாய குளங்களை புணரமைத்து விவசாயத்திற்கு தேவையான நீர்பாசனத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் விவசாயத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு தேவையான பயிற்ச்சிகளை அதிகளவில் வழங்குவதன் மூலமாக விவசாயம் சம்பந்தமான அறிவு பூர்வமான ஒரு சமூகத்தினை மட்டக்களப்பில்  கட்டியெழுப்பி அதனை எதிர்காலத்தில் என்.வி.கியூ 4 பயிற்சி நெறிவரை தரம் உயர்த்தப்படும். இவ்வாறு தொடர்ச்சியான பயிற்சிகள்  மூலம் நவீன விவசாய முறைகளைப் புகுத்தி ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் விவசாயத்தை நவீன மயப்படுத்தி விளைச்சலை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் நான் முன்னெடுப்பேன். என அவர் இதன்போணத தெரிவித்தார்.

விதைகளையும், விளைச்சலையும் பாதுகாப்பாக வைக்க கூடிய களஞ்சிய சாலைகளை உருவாக்கி விவசாயிகளை பாதுகாத்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் இதன்போது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 






SHARE

Author: verified_user

0 Comments: