மட்டு.மாவட்டத்தில் 25 பாடசாலைகள் திறக்கப்படவில்லை.
கொரோ அச்சம் காரணமாக மூடப்ப்ட்ட பாடசாலைகள் புதிய தவணைக்காக நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (11) திறக்கப்பட்ட போதிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள 25 பாடசாலை திறக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினுள் அடங்கும் காத்தான்குடி கல்வி கோட்டத்தில் அனைத்து
பாடசாலைகளும் திங்கட்கிழமை (11) மூடப்பட்டிருந்தன.
குறித்த பிரதேசத்தில் எதிர்வரும் 15 ம் திகதி வரை தனமைப்படுத்தல் சட்ம் அமுலில் உள்ளது.
இதனால் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்குமென மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன
தெரிவித்தார்.
மாவட்டத்தின் ஏனைய அனைத்து பாடசாலைகளும் திங்கட்கிழமை (11) திறக்கப்பட்டிருந்த. போதிலும் கர்த்தால் காரணமாக
அதிபர் ஆசிரியர்கள் அப்பாடசாலைகளுக்குச் சமூகமளித்திருந்த போதிலும், மாணவர்கள் வருகைதந்திருக்கவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
0 Comments:
Post a Comment