23 Dec 2020

வெளவாலுக்கு வைத்த குறி தாதியைத் தாக்கியது தாதி அவசர சிகிச்சைப் பிரிவில் சுட்டவர் கைது.

SHARE

வெளவாலுக்கு வைத்த குறி தாதியைத் தாக்கியது தாதி அவசர சிகிச்சைப் பிரிவில் சுட்டவர் கைது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் தாதி உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3 ஆம் குறுக்கு வீதியை அண்டியுள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை 22.12.2020 இரவு  9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பூம்புகார், கண்ணகியம்மன் வீதியை சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலைமைத் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் நடராஜா ராதா (வயது 55)  என்பவரே படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

பறவைகளை சுடும் எயார்கன் துப்பாகியைக் கொண்டு வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வெளவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்துள்ளது. இதில் தலைமைத் தாதிய உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த தாதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கியுடன் துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 





SHARE

Author: verified_user

0 Comments: