22 Dec 2020

மறைக்கல்வி ஞாயிறு பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

SHARE

மறைக்கல்வி ஞாயிறு பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மறைக்கல்வி மற்றும் ஞாயிறு பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை  (21) மாவட்ட செயலகத்தி மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

மாவட்ட கிறிஸ்தவ சமய உத்தியோகத்தர் திருமதி ரேகா நிருபனின் ஒழுங்கமைப்பில் தேவைக்கு ஏற்ப முன்னுரிமையடிப்படையில் தெரிவுசெயப்பட்ட மறைக்கல்வி ஞாயிறு பாடசாலைகளுக்கு பொறுப்பான அருட்பணியாளர்கள் அருட்தந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

நத்தார் பண்டிகை காலத்தில் இவ்வாறான கற்றல் உபகரணங்களை சிறார்களுக்கு வழங்குவது மகிழ்சியளிக்கின்ற செயல்பாடகவே கருதுவதகா பிரசன்னமாயிருந்த அருட்தந்தையர்கள் குறிப்பிட்டனர் அத்தொடு நத்தார் வாழ்த்துக்களை அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் அவசியமான பாடசாலைகளான புல்லுமலை ஆயித்தியமலை பனிச்சங்கேணி காந்திகிராமம் புளியந்தீவு கொக்கட்டிசோலை முறக்கொட்டான்சேனை நாந்தாமலை கிரான் ஆகிய பாடசாலைக்கு வழங்கப்பட்டது இன் நிகழ்வில் மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த மாவட்ட உதவி செயலாளர் ஏ.நவேஸ்வரன் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி வ.ஜீவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: