30 Dec 2020

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரங்களிலுள்ள வர்தகர்கள் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

SHARE

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரங்களிலுள்ள வர்தகர்கள் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

மட்டக்களப்பு நகர் பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் 1 214 பேருக்கு புதன்கிழமை (30)  பொலிசார் மற்றும் இராணுவத்தினரிருடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் 63  பேருக்கு தொற்றுதிப்படுத்தப்பட்டதென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

 புதன்கிழமை (30) சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டபடி காத்தான்குடியிலுள்ள வர்தகர்கள் மற்றும் ஊழியர்கள் 665 பேருக்கும் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் 549 பேர் உட்பட 1214 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை  அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியில் மேற்கொள்ளப்பட் பரிசோதனையில்  காத்தான்குடியைச் சேர்ந்த 24 பேருக்கும், ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும்  மட்டக்களப்பைச் சேர்ந்த  2பேர் உட்பட 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 10 பேர் பரிசோதனைக்கு செல்லவில்லை. அதேவேளை இதில் தொடர்புடையவர்களின் வர்த்தக நிலையங்களான    ரெக்ஸ்ரையில்கள், பான்சி கடைகள், குழந்தைகளுக்கான் பொருட்களை விற்பனை நிலையம் உட்பட் 17 கடைகளை சுகாதார அதிகாரிகள் மூடினர். 

இதேவேளை  காத்தான்குடியில்  665  பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தொற்றாளர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வர்தகநிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்று திரும்பியவர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






SHARE

Author: verified_user

0 Comments: