15 Nov 2020

ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது பொருட்களும் மீட்பு.

SHARE

ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது பொருட்களும் மீட்பு.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவில் இரண்டு ஐஸ் போதை பொருள் விற்பணையாளர்கள் இருவர் சனிக்கிழமை (14) மாலை  கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எனவும் புதிய காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள்  எனவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

இவர்களிடமிருந்து தலா 6கிறாமும் 400 மில்லிகிறாமும், 105 கிறாமும் 300 மில்லி கிறாமும் ஐஸ் போதை வஸ்த்து மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு டெப் என்பவற்றையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்;பிட்டனர்.

அத்தியட்சகர் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி ஆகியோரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ராஜகருணா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவ்விருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவ்விருவரையும் 14.11.2020 சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர்வரும் 27.11.2020ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்திரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் மேலும் தெரிவித்தனர்.

இது தெடர்பில் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.










SHARE

Author: verified_user

0 Comments: