25 Nov 2020

காத்தான்குடி நகர சபை பிரிவில் மேலும் 100 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனை.

SHARE

காத்தான்குடி நகர சபை பிரிவில் மேலும் 100 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனை.

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் மேலும் 100 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் செவ்வாய்கிழமை (24) இடம் பெற்றன.

ஆரையம்பதி ஒள்ளிக்குளத்தில் இருந்த பெண்ணெருவருக்கு கடந்த வியாழக்கிழமை கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அப் பெண்ணுடன் தொடர்பு பட்ட ஆரையம்பதி பிறண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரியும் பெண்கள் சிலருக்கும் அப்பெண்ணை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வந்த சிலருக்கும் தனிமைப்படுத்தலில் இருக்கும் சிலருக்குமாக 100 பேருக்கு இதன் போது அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசன் மற்றும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் ஆகியோரின் முன்னிலையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்களில் வைத்து இவர்களின் மாதிரிகள் பெறப்பட்டன.

இவர்களின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: