(படுவான் பாலகன்)
மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் வேகத்தடை, வேகக்கட்டுப்பாட்டு பலகை அமைப்பதற்கான தீர்மானம் நேற்று(27) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை அமர்வின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் மக்கள் அதிகம் நடையில் பயணம் செய்கின்ற வீதிகளில் வேகத்தடை, வேகக்கட்டுப்பாட்டு பலகைகள் அமைக்கப்பட வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு தடை இன்மையினால் பல வீதிகளில் வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வேகத்தடை அவசியமாக வீதியில் இடப்பட வேண்டுமென சபையின் உறுப்பினர் ம.குகநாதன் பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.குறித்த பிரரேரணை பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து அமைப்பதென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, கிராமங்களில் உள்ள சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
0 Comments:
Post a Comment