மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ராமகிருஷ்ண மிஷ்னிற்கு விஜயம்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் கல்லடி இராமகிருஷ்ன மிசனிற்கு சனிக்கிழமை (17) உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
தனது பதவியேற்பினையடுத்து மதத்தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறும் நோக்குடன் இந்த விஜயம் அமைந்திருந்தது. இதன்போது மட்டு.ஆஸ்ரம துணை மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் மற்றும் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் ஆகியோரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுவரும் பகவான் ஸ்ரீராமகிருஸ்ணர் கோவில் புனருத்தாரண திருப்பணிகளையும் பார்வையிட்டதுடன் சுவாமிகளுக்கான நினைவுப் பரிசினையும் வழங்கி வைத்தார்.
இவ்விஜயத்தின்போது உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட தகவல் அதிகாரி. வீ.ஜீவானந்தன், ஓய்வு நிலை வலயக்கல்வின் பணிப்பாளர் கே.பாஸ்காரன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment