24 Oct 2020

எரிபொருள் ஏற்றி வந்த புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் மரணம்.

SHARE


 (எச்.ஹுஸைன்)

எரிபொருள் ஏற்றி வந்த புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் மரணம்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு பாலையடித்தோணா புகையிரதப் பாதையில் குடும்பஸ்தரான ஆணொருவர்; புகையிரதத்தினால் மோதுண்டு மரணமடைந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை 24.10.2020 அதிகாலை 4.50 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சந்திவெளி வைத்தியசாலை வீதி கடற்கரை பகுதியைச் சேர்ந்த எஸ். தங்கவேல் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரெயிலில் மோதுப்பட்டே இவர் உயிரிழந்துள்ளார்.

சடலத்தை ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்த புகையிரத அதிகாரிகள் இச்சம்பவம்பற்றி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம்குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதாரவைத்தியசாலையில் ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: