30 Oct 2020

மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 17பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

SHARE

மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 17பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 17 நபர்கள் மட்டக்களப்பு கோட்டைமுனையில் வியாழக்கிழமை (29) மாலை தனிமைப்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு கோட்டைமுனை பொதுச்சுகாதார  பரிசோதகர் பிரிவில் உள்ள சீலாமுனை கள்ளுத்தவறணை உரிமையாளர்  உட்பட வாடிக்கையாளர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையால் தனிமைப்படுத்தல் மற்றும்  நோய்த்தடுப்பு தொடர்பான  கட்டளைச்சட்டத்தின் படி பொதுச்சுகாதார பரிசோதகர்களான ரி.மிதுன்ராஜ், எஸ்.அமிர்தாப், எஸ்.தீபகுமாரன் மற்றும் பொலிசார் இணைந்து நாடத்திய சோதனையில்  அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 32ஐத் தாண்டியதையதையடுத்து சுகாதாரநடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: