4 Sept 2020

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய பிள்ளையான்.

SHARE
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 5 மணி நேரம் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.அடுத்த வார நாடாளுமன்ற அமர்வுகளிலும் பிள்ளையான் பங்கேற்கவுள்ளதை அடுத்து நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடைந்த பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் பிள்ளையான் தங்க வைக்கப்படுவார் என்று மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு நேற்றைய தினம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை,முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர,நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(tw:n)



SHARE

Author: verified_user

0 Comments: