14 Sept 2020

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இலங்கை போக்குவரத்து பஸ்ஸில் இளைஞர் ஒருவர் மோதுண்டு விபத்து.ஒருவர் படுகாயம்.மோட்டார் சைக்கிள் சேதம்.

SHARE

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இலங்கை போக்குவரத்து பஸ்ஸில்  இளைஞர் ஒருவர் மோதுண்டு விபத்து.ஒருவர் படுகாயம்.மோட்டார் சைக்கிள் சேதம்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில்  திங்கட்கிழமை(14) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் கொண்டிருக்கையில் தேற்றாத்தீவு பிரதான வீதியில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்துக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் பேருத்துடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதனால் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனால் மோட்டார்சைக்கிள், பயணிகள் பஸ் சேதமடைந்துள்ளது. இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.







SHARE

Author: verified_user

0 Comments: