பாசிக்குடா கடலில் பாடசாலை மாணவன் பலி.
மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் பலியானதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
பாசிக்குடா யானைக்கல் கடற் பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை 12.09.2020 மீட்கப்பட்ட சடலம் வாழைச்சேனை செம்மண்ணோடை 4ஆம் பிரிவு ஹிஸ்புல்லாஹ் வீதியை அண்டி வசிக்கும் ஜவாத் முஹம்மத் ரிஸ்னி என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நண்பர்கள் இருவருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது கடலில் இருக்கும் கல்மலையில் சிக்குண்டே இவர் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு உடற் கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment