9 Aug 2020

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு, களுதவாளையில் தாகசாந்தி நிகழ்வும், விஷேட பூஜை வழிபாடும்.

SHARE

  • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  தேர்தல் வெற்றியை முன்னிட்டு, களுதவாளையில் தாகசாந்தி நிகழ்வும், விஷேட பூஜை வழிபாடும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியி கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஒரு ஆனசத்தை அக்கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  அவர்கள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (09) மட்டக்களப்பு களுவாவளை பிரதான வீதியில் தாக சந்தி நிகழ்வும், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேஷட பூஜை வழிபாடுகளும், இடம்பெற்றன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் களுதாவளை வட்டார பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அக்கட்சியின் பிரதிதி தலைவர் நாகலிங்கம் திரவியம் (ஜெயம்), கட்சியின் பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ், கட்சியின் முக்கியஸ்த்தர்கள், மற்றும் கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 67692 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.


































SHARE

Author: verified_user

0 Comments: