18 Aug 2020

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நட்டிவைப்பு.

SHARE
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நட்டிவைப்பு.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் குடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு செவ்வாக்கிழமை (18) மட்டக்களப்பு மாவட்டம் கோரகல்லிமடு கிராமத்தில் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவீரர் குடும்பங்களின் இணைப்பாளர் எஸ்.குமரேசன், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜே.ஜெயராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜே.ஜெயராஜ் அவர்களின் முயற்சியினால் புதிதாக கட்டிக் கொடுக்கப்படவுள்ள இவ்வீட்டுக்குரி அடிக்கல் நடும் நிகழ்வில் கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்கள், அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.




















SHARE

Author: verified_user

0 Comments: