7 Aug 2020

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார்

SHARE

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுடன் சேர்ந்து பயணிக்க தயாரென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பொது தேர்தலில் 09 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதை தொடர்ந்து இன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசைகள் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்து உள்ளனர் இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்கபட்ட போதிலும் கூட்டமைப்பிற்கு 09 ஆசனம் கிடைத்திருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி

இம்முறை இடம் பெற்ற தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை.
மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளனர்.

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதி மற்றும் கெளரவமான பிரஜையாக வாழ தீர்வு வழங்கப்பட வேண்டும்.

அதில் நாம் உறுதியாக உள்ளோம் ஆனால் ஆட்சி அமைக்கும் அரசின் நிலைபாட்டை கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
x

SHARE

Author: verified_user

0 Comments: