தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னை அவர்களுக்குச் சேவை செய்வதற்கு என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளார்கள்.
இந்த நாடாளுமன்ற அமர்வில் வந்து நான் கலந்து கொள்வதற்கும் பல தடங்கல்களும் தாமதங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி கோர வேண்டும். இப்படி ஒரு சூழலில் என்னால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது.
எங்களுடைய நாட்டில் சமூக முரண்பாடுகள் நடந்து முடிந்திருக்கின்றன. நாம் இந்த சமூக முரண்பாடு, ஆயுத பேராட்டங்கள் காரணமாக 16 வயதிலே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராடியவன்.
ஆனால் அந்த அமைப்பின் நோக்கங்கள் கொள்கைகள் பிழைத்ததன் காரணமாக அதிலிருந்து விலகி ஜனநாயக ரீதியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை ஆரம்பித்து இன்று பல விடயங்களை செய்திருக்கின்றோம்.
இந்த நிலையில் இப்போது வட பகுதி மக்களும் தென்பகுதி மக்களும் இணைந்து பலமான ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நான் ஒத்துழைப்பு வழங்குவேன் என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment